அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஜனாதிபதி உறுதி – சம்பந்தன்…!!
Read Time:1 Minute, 13 Second
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான உறுதி மொழியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தங்களிடம் வழங்கி இருப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
எமது செய்திரிவுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த விடயம் சம்மந்தமாக, ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதன்போது, பாரதூரமான குற்றச்சாட்டுகளைக் கொண்ட அரசியல் கைதிகளைத் தவிர ஏனையோரை அடுத்த மாதம் 7ம் திகதிக்கு முன்னர் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி நீதி அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி செயற்படவிருப்பதாக நீதியஅமைச்சர் தமக்கு உறுதியளித்ததாகவும் சம்பந்தன் கூறியுள்ளார்.
Average Rating