சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் பொட்டு அம்மான் நடத்தும் புதிய வியாபாரம்!!

Read Time:7 Minute, 53 Second

anilttetiger_money.gifஷ்ரீலங்காவில் வட,கிழக்குப் பிரதேசங்களில் வாழும் தமிழர்களுக்கென தனியான தமிழீழ நாட்டை உருவாக்கும் இலட்சியம் பற்றியும் அந்தக் குறிக்கோளை அடைவதற்காக மேற்கொள்ளும் பயங்கரவாதத் திட்டங்கள், தாக்குதல்கள் பற்றியும் பரந்த பிரசாரங்களை மேற்கொண்டு `தமிழ் ஈழம்’ கண்காட்சியை நடத்திவரும் விடுதலைப் புலிகள் இயக்க பயங்கரவாதிகள் தமது பயங்கரவாத யுத்த முறைகள், தாக்குதல் திட்டங்களை ஏனைய சர்வதேச பயங்கரவாத இயக்கங்களுக்கு பெருந்தொகைப் பணத்துக்கு விற்க ஆரம்பித்துள்ளளதாகவும் தற்போது இந்த யுத்த முறைகள்,திட்டங்களின் வியாபரம் குறிப்பிட்ட சர்வதேச பயங்கரவாத இயக்கங்களிடையே வெகு தீவிரமாக நடந்துவருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு புலனாய்வுத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. பெருந்தொகை மில்லியன் ரூபா கணக்கில் நடந்துவரும் இந்த வியாபார நடவடிக்கைகளில் புலிகளின் இயக்கம் சர்வதேச பயங்கரவாத இயக்கங்களுக்கு அதன் கெரில்லா மற்றும் பயங்கரவாதத் தாக்குதல் திட்டங்கள், முறைகளை மட்டுமன்றி, அவற்றின் பயிற்சிகளுக்காக புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களும் குறித்த இயக்கங்களுடன் சேர்ந்து இயங்கிவருவதாகவும் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைப் புலிகள் இயக்கம் சர்வதேச ரீதியில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் மேற்படி தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், இந்த பயங்கரவாதத் திட்டங்கள் பயிற்சிகளின் சர்வதேச வியாபாரம் புலிகள் இயக்கப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மானின் தலைமையிலும் வழிகாட்டலிலுமே நடந்து வருவதாகவும் இந்த வியாபாரத்தின் மூலம் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு பெருந் தொகையில் பணம் இடப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ரீதியில் புலிகளின் ஆயுதக் கடத்தல், போதைவஸ்து வியாபார நடவடிக்கைகள் தற்போது பல்வேறு நாடுகளிலும் கண்காணிக்கப்பட்டு முடக்கப்பட்டு வரும் நிலையில் மேற்படி பயங்கரவாதத் தாக்குதல் திட்டங்களின் வியாபாரத்தில் புலிகள் இயக்கம் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்துள்ளதாகவும் அத்துடன் புலிகள் இயக்கத்துக்கு சர்வதேச ரீதியில் பெரும் பணம் கிடைக்கும் முக்கிய மார்க்கமாக இந்த பயங்கரவாத வியாபாரமே தற்போது உள்ளதாகவும் தெருவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் பல்வேறு சர்வதேச பயங்கரவாத இயக்கங்களுடன் மேற்படி வியாபாரம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களை புலிகள் இயக்கம் செய்துவிட்டதாகவும் இந்த நிலையில் தமிழ் ஈழ தனிநாட்டுக் கொள்கையையும் பயங்கரவாத யுத்தக் கொள்கையையும் கைவிட்டுச் சமாதானப் பேச்சுகளுக்கு புலிகள் இயக்கத் தலைமைத்துவம் உடன்படும் என எதிர்பார்க்க முடியாதெனவும் பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட உத்தியோகத்தர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்தச் சர்வதேச பயங்கரவாத வியாபாரம் சம்பந்தமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் சாதகமான நிலைப்பாட்டை உடையவர்களாகச் செயற்படவில்லை எனவும் இதன் காரணமாக பொட்டு அம்மான் குறித்த இரண்டாம் மட்டத் தலைவர்களை ஒதுக்கிவிட்டு இந்தப் பயங்கரவாத வியாபாரத்தை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாகவும் புலிகள் தரப்பு உயர்மட்டத் தகவல்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

தற்போது இவ்வாறு புலிகள் இயக்கத்தில் குறிப்பிட்ட முக்கிய தலைவர்கள் பொட்டு அம்மானால் ஒதுக்கப்பட்டு வரும் நிலையில் இயக்கம் இரண்டு பிரதான பிரிவுகளாக பிளவுபடும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் இவ்வாறு சர்வதேச பயங்கரவாத வியாபாரத்தின் மூலம் பெருந்தொகை வெளிநாட்டுப் பணத்தைச் சேகரித்து வரும் பொட்டு அம்மானின் ஒரே நோக்கம் புலிகள் இயக்கத்தின் அனைத்து நிதிகளுக்கான பொறுப்பையும் தனது கையிலெடுப்பதே எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு புலிகள் இயக்கம் இரண்டு அணிகளாக வருவது பற்றி மேலும் தெரிவிக்கப்படும் தகவல்களுக்கேற்ப அண்மையில் புலிகள் இயக்கத் தலைவரின் மகனை இயக்கத்தின் உயர்மட்டப் பதவிக்கு நியமிப்பதற்காக தலைவர் பிரபாகரனும் மற்றும் தலைமைத்துவ உறுப்பினர்களும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பொட்டு அம்மான் எதிர்ப்பையே தெரிவித்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு புலிகள் இயக்கத் தலைவரின் மகன் சாள்ஸ் அன்ரனிக்கு எதிரான ஒரு அணியாகவே பொட்டு அம்மான் செயற்படுவதாக தெரிவிக்கப்படுவதாகவும் அத்துடன் இந்த அடிப்படையில் அண்மையில் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ்ச்செல்வன் பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி உயர்மட்ட பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு ஆதரவான அணியாகவே இயங்கி வந்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.

இந்த வகையில் சர்வதேச பயங்கரவாத இயக்கங்களுடன் பொட்டு அம்மான் வழிகாட்டலிலும் திட்டத்தின் கீழும் நடத்தப்படும் பெருந்தொகை வெளிநாட்டு பணத்தைத் தரும் சர்வதேச பயங்கரவாத வியாபாரம் இயக்கத்தின் நிதியைத் தன்கையில் எடுத்துக்கொள்ளும் திட்டம், பிரபாகரன் மகன் சாள்ஸ் அந்ரனியின் உயர்மட்ட நியமனத்திற்கு எதிரான நிலைப்பாடு, சாள்ஸ் அன்ரனிக்கு ஆதரவான அணித் தலைவராக தமிழ்ச்செல்வன் இயங்கியது போன்ற விடயங்கள் அண்மையில் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு முக்கிய காரணங்களாக இருந்தன என்ற தகவலையும் வன்னிப் புலிகள் தரப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பாகிஸ்தானில் துப்பாக்கி சூட்டில் இரு குழந்தைகள் பலி
Next post புலிகள் படகு தளம் மீது குண்டுவீச்சு