தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 2 சிறுமிகள் கடத்தப்பட்டு பலாத்காரம்…!!

Read Time:2 Minute, 15 Second

imagesடெல்லியில் நேற்றிரவு 2 சிறுமிகள் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி நங்க்லோய் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு, ராம்லீலா திருவிழா நடந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், இரவு 11 மணியளவில் திடீரென மின்சாரம் நின்றுள்ளது. அப்போது 2½ வயது சிறுமியை மர்ம மனிதர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.

ஆனால் இந்த விடயம் மின்சாரம் வந்த பிறகே தெரியவந்துள்ளது. பொலிசார் விசாரணையில் 2 வாலிபர்கள் அந்த சிறுமியை தூக்கிச் சென்றது தெரியவந்துள்ளது.

பின்னர் இன்று அதிகாலை அந்த சிறுமி பூங்கா ஒன்றில் மயங்கிய நிலையில் கிடந்தார்.

தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவரது உடலில் பல இடங்களில் காயமும் ஏற்பட்டுள்ளதால் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையில் டெல்லியின் கிழக்கு பகுதியில் உள்ள ஆனந்த விகார் என்ற இடத்தில் 5 வயது சிறுமி நேற்றிரவு கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

அந்த சிறுமியும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் வழங்கிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், மக்களுக்கு பாதுகாப்பு வழங்க டெல்லி பொலிசார் தவறி விட்டனர்.

மேலும், பிரதமரும், துணைநிலை ஆளுநரும் என்ன செய்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளம் பெண்ணை தூக்கி சென்று பலாத்காரத்தில் ஈடுபட்ட நபர்: வீடியோவை வெளியிட்டு தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிசார் (வீடியோ இணைப்பு)…!!
Next post 4ம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை…!!