4ம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை…!!
ஜார்கண்டில் 4ம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ள சம்பவ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காயில்கேரா என்ற கிராமத்தில் தனது உறவினர் வீட்டில் தங்கி வந்த அந்த மாணவி, பள்ளி முடிந்து வந்தவுடன் துணிகளை துவைப்பதற்காக அருகில் உள்ள நீர்நிலைக்கு சென்றுள்ளார்.
ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், சிறுமியின் குடும்பத்தினர் அவரை பல இடங்களிலும் தேடியுள்ளனர்.
இரவாகியும் அந்த சிறுமியை கண்டுபிடிக்க முடியாத நிலையில், அவரது சடலம் ஒரு அடர்ந்த முட்புதர்களுக்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த சிறுமியின் முகம் பலமாக தாக்கப்பட்டுள்ளதுடன், காயங்களை வைத்து பார்த்தால், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளது போல் தெரிவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பொலிசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Average Rating