நெல்லியடியில் உடலில் தீவைத்து கொண்ட நபர் உயிரிழந்துள்ளார்…!!
Read Time:58 Second
யாழ்ப்பாணம், நெல்லியடி பிரதேசத்தில் உடலில் தீ வைத்து கொண்ட ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக நெல்லியடி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நபர் நேற்று முன்தினம் இரவு உடலில் தீவைத்து கொண்டதாகவும் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கரவெட்டி பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான குமாரசாமி நிரோஜன் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் குறித்த நபரின் மோட்டார் சைக்கிளும் தீயில் எரிந்து அழிந்துள்ளது எனவும் காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
Average Rating