பிஞ்சு குழந்தையை மருத்துவமனையில் விட்டு தப்பிய தாய்: தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிஸ்…!!
மருத்துவமனை ஒன்றில் பிறந்து சில மணி நேரமே ஆன பிஞ்சு குழந்தையை விட்டு விட்டு தப்பிய தாயை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பிரித்தானியாவின் Harrow பகுதியில் உள்ள Northwick Park மருத்துவமனையில் Anna Chudy என்பவர் மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை காலையில் சிசேரியன் முறைப்படி அவருக்கு பூரண ஆரோக்கியத்துடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இந்நிலையில் குழந்த பிறந்த அடுத்த நாள் தன்னுடன் வந்த ஆண் ஒருவருடன் குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டு விட்டு அவர்கள் அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது.
குழந்தையின் அருகே உரியவர்கள் எவரும் வெகு நேரமாக இல்லை என தெரிந்த செவிலியர்கள் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மருத்துவமனை முழுவதும் தேடிய பின்னரும் அவர்களை பிடிகிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் பொலிசாரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த பொலிசார் முதற்கட்ட விசாரனைக்கு பின்னர் சி.சி.டி.வி.யில் பதிந்திருந்த அவர்களது புகைப்படத்தை வெளியிட்டு தீவிர தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
குறிப்பிட்ட நபர்கள் குறித்து தகவல் அறியவரும் பொதுமக்கள் உடனடியாக பொலிசாரை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
Average Rating