பிஞ்சு குழந்தையை மருத்துவமனையில் விட்டு தப்பிய தாய்: தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிஸ்…!!

Read Time:2 Minute, 6 Second

hunt_mother_003மருத்துவமனை ஒன்றில் பிறந்து சில மணி நேரமே ஆன பிஞ்சு குழந்தையை விட்டு விட்டு தப்பிய தாயை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பிரித்தானியாவின் Harrow பகுதியில் உள்ள Northwick Park மருத்துவமனையில் Anna Chudy என்பவர் மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை காலையில் சிசேரியன் முறைப்படி அவருக்கு பூரண ஆரோக்கியத்துடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்நிலையில் குழந்த பிறந்த அடுத்த நாள் தன்னுடன் வந்த ஆண் ஒருவருடன் குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டு விட்டு அவர்கள் அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது.

குழந்தையின் அருகே உரியவர்கள் எவரும் வெகு நேரமாக இல்லை என தெரிந்த செவிலியர்கள் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மருத்துவமனை முழுவதும் தேடிய பின்னரும் அவர்களை பிடிகிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் பொலிசாரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த பொலிசார் முதற்கட்ட விசாரனைக்கு பின்னர் சி.சி.டி.வி.யில் பதிந்திருந்த அவர்களது புகைப்படத்தை வெளியிட்டு தீவிர தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

குறிப்பிட்ட நபர்கள் குறித்து தகவல் அறியவரும் பொதுமக்கள் உடனடியாக பொலிசாரை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பூந்தமல்லியில் பூட்டிய வீட்டில் பெண் கொலை: உறவினர்களிடம் விசாரணை…!!
Next post கால்பந்து விளையாட்டு வீரர் டேவிட் பெக்காம் வாங்கும் ஆடம்பர வீடு: பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள்…!!