டுபாய் – கொழும்பு விமானத்தின் தொலைக்காட்சி உடைப்பு!- இலங்கையர் கைது…!!
Read Time:1 Minute, 30 Second
டுபாயிலிருந்து இலங்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியை உடைத்து சேதப்படுத்திய நபருக்கு நீதிமன்றம் பிணை வழங்க மறுப்புத் தெரிவித்துள்ளது.
விமானத்தில் இலவசமாக வழங்கப்படும் மதுபானத்தை நண்பர்களுடன் அருந்திவிட்டு விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த நான்கு லட்சத்து 11 ஆயிரத்து 635 ரூபா பெறுமதியான தொலைக்காட்சியை மதுபோதையில் உடைத்துள்ளார்.
மேற்படி குற்றச்சாட்டின் பேரில் கைதான குறித்த சந்தேக நபர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
காலி, உலுக்கேவிடவைச் சேர்ந்த அசேல விஜேநாயக்க என்பவருக்கே இவ்வாறு பிணை மறுக்கப்பட்டுள்ளது.
இவரை நாளை செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் கே.ஜீ. குணதாச உத்தரவிட்டுள்ளார்.
Average Rating