பால் சிக்கியதால் குழந்தை பலி…!!
Read Time:1 Minute, 10 Second
சிறுவர் இல்லத்தில் இருந்த இரண்டு மாதமேயான குழந்தையொன்று பாலூட்டும் வேளையில் பால் தொண்டையில் சிக்கிக் கொண்டதால் உயிரிழந்துள்ளது.
கண்டி , உடபேராதெனிய பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த குழந்தை இரண்டு மாதங்களுக்கு முன்னர் பேராதெனிய வைத்தியசாலையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சிறுவர் இல்லத்தில் பணிபுரியும் பெண்ணொருவர் , பால்போத்தலைப் பயன்படுத்தி குழந்தைக்கு பாலூட்டிய நேரத்தில் , பால் சிக்கியமையால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating