பாகற்கொடியில் காய்த்த தக்காளி
Read Time:46 Second
பாகற்கொடியில் தக்காளி விளைந்த அதிசயம் நெல்லையில் நிகழ்ந்துள்ளது. தென்காசி கீழப்புலியூரைச் சேர்ந்தவர் சிங்கத்துரை. விவசாயி. வீட்டுத்தோட்டத்தில் பாகற்கொடி வளர்த்தார். பந்தலில் பாகற்கொடி படர்ந்துள்ளது. இதில் பாகற்காய்கள் காய்த்து தொங்குகின்றன.இந்நிலையில் பாகற்கொடியில் தக்காளிக்காய் காய்த்திருந்தது. இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பகுதி பொதுமக்கள் இந்த அதிசய தக்காளியைப் பார்த்தனர்.