செவ்வாய் கிரகத்தில் சித்திர எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பாறைகள்? (வீடியோ இணைப்பு)…!!
செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் பண்டைய சித்திர எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் கியூரியாசிட்டி என்ற விண்கலம், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வருகிறது.
அதுமட்டுமின்றி பல்வேறு புகைப்படங்களையும் எடுத்து அனுப்பிக் கொண்டிருக்கிறது.
இந்த புகைப்படத்தை ஆய்வு செய்த யுஎப்ஓ அதாவது வேற்றுகிரக வாசிகள் குறித்து ஆய்வு செய்யும் அமைப்பு ஒன்று செவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான புத்தர் சிலை இருப்பதாக தகவல் வெளியிட்டிருந்தது.
இதன் மூலம் அறிவார்ந்த வாழ்க்கை முறை, அங்கு இருப்பதற்கான ஆதாரம் உள்ளதாகவும் தெரிவித்தது.
இந்நிலையில், தற்போது எகிப்திய சிற்பங்கள் போலவே இருக்கும். பண்டைய எழுத்து சிற்பங்கள் இருப்பதாக கூறி உள்ளனர்.
மேலும் இதனை நெருக்கத்தில் பார்த்தால் ஒரு நினைவு சின்னம் போல் உள்ளது என்றும், எழுத்து வடிவம் வேற்று ஒரு கிரகத்தில் உள்ளது ஆச்சரியமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
Average Rating