கோபத்தின் உச்சக்கட்டம்: விமானத்தில் சகபயணியை கடித்துக்கொலை செய்த பெண்ணின் வெறிச்செயல்…!!
போர்ச்சுகல் நாட்டின் விமான பயணத்தில் ஏற்பட்ட தகராறால் வாலிபர் ஒருவரை, பெண்மணி ஒருவர் கடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்து விமான நிறுவனத்திற்கு சொந்தமான EI 485 என்ற விமானம் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் இருந்து டூப்ளிகனுக்கு சென்றுகொண்டிருந்தது.
இந்த விமானத்தில் 165 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் பயணித்துள்ளனர், அப்போது பிரேசில் நாட்டை சேர்ந்த 24 வயது வாலிபருக்கும், அவரது அருகே அமர்ந்திருந்த 44 வயது பெண் பயணி ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் உச்சகட்டத்தை எட்டியுள்ளதையடுத்து, கோபம் கொண்ட அப்பெண், அந்த வாலிபரை வெறித்தனமாக கடித்து குதறியுள்ளார்.
இதனால் அந்த வாலிபர் நிலைதடுமாறி மயங்கி விழுந்துள்ளார், உடனடியாக விமானத்தில் இருந்த செவிலியர்கள் சிகிச்சை அளித்தும் அந்த வாலிபருக்கு மயக்கம் தெளியவில்லை, இதனைத் தொடர்ந்து அயர்லாந்தின் கார்க் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிரக்கப்பட்டது.
உடனடியாக அவசரஊர்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த வாலிபரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, தற்போது அப்பெண்ணிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், அவரது சூட்கேசியில் 2 கிலோ எடையுள்ள போதை மருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் அப்பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Average Rating