பச்சிளம் குழந்தைகள் 2 பேர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை: பெற்றோர் கவலைக்கிடம்…!!

Read Time:2 Minute, 55 Second

haryana_killings_002ஹரியானாவில் 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள சங்விக் என்ற கிராமத்தில், ஜிதேந்தர் (27), மனைவி ரேகா (24) மற்றும் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் இருந்த வீட்டுக்குள் மர்ம நபர்கள் சிலர் அதிகாலையில் புகுந்துள்ளனர்.

மேலும் அந்த கும்பல், வீட்டிற்கும் அந்த நால்வர் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் சம்பவ இடத்திலேயே இரு குழந்தைகளும் கருகி உயிரிழந்துள்ளனர்.

குழந்தைகளின் தாய், தந்தை இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற‌னர்.

தற்போது பொலிசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலித் குடும்பத்தை சேர்ந்த இவர்களுக்கும் மேல் சாதியினருக்கும் இருந்துவந்த பகை காரணமாகவே இந்த வெறி செயல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

சில வாரங்களுக்கு முன் உயர்சாதியினரான ராஜபுத்திரர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர்கள் மீது ஜிதேந்தர், பொலிசில் புகார் அளித்துள்ளார்.

ஜிதேந்தர் கூறுகையில், அவர்கள் என்னை கிராமத்திற்குள்ளே இருக்கக் கூடாது என்று மிரட்டினார்கள்.

நான் போய் விடுகிறேன், என் குழந்தைகளை மட்டும் உயிரோடு கொடுத்து விடுங்கள் என்று தற்போது கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து, ஹ‌ரியானா முதல்வருடன் தொலைபேசியில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமைதியை நிலைநாட்டி, எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறும், தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கூறியுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து ஹரியானா மாநிலத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நள்ளிரவில் அலைந்து திரிந்த சிறுவன்: தெருவீதியில் படுத்துறங்கிய பெற்றோர்…!!
Next post விபத்தில் உயிரிழந்த காதல் கணவனுடன் உடன்கட்டை ஏற முயன்ற மனைவி…!!