விபத்தில் உயிரிழந்த காதல் கணவனுடன் உடன்கட்டை ஏற முயன்ற மனைவி…!!

Read Time:2 Minute, 2 Second

sati_001ஒடிசாவில் விபத்தில் உயிரிழந்த கணவருடன் அவரது மனைவி உடன்கட்டை ஏற முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நயாகார் மாவட்டம் கும்பர் சகி என்ற கிராமத்தைச் சேர்ந்த லொறி ஓட்டுனர் ரபீந்திரா (28) என்பவருக்கும், லிபி (20) என்ற பெண்ணுக்கும் 4 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது.

ஒடிசாவில் இருந்து லொறியில் பழங்கள் ஏற்றிச் சென்ற ரபீந்திரா ஆந்திரா செல்லும் வழியில் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கணவர் இறந்த தகவலை அடைந்த அதிர்ச்சிக்குள்ளான அந்த பெண், 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து ரபீந்திராவின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து உடலை எடுத்து செல்லும் போது லிபி கதறியழுதுள்ளார்.

பின்னர் சுடுகாட்டில் தகனம் செய்ய உடலை எடுத்து சென்ற போது திடீரென வீட்டில் இருந்து லிபி ஓடியுள்ளார்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில், கணவரின் உடல் எரிந்து கொண்டிருந்த சிதையில் குதித்து உடன்கட்டை ஏறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவரது உடலில் 60 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பச்சிளம் குழந்தைகள் 2 பேர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை: பெற்றோர் கவலைக்கிடம்…!!
Next post வெறித்தனமாக ஓடி கடலில் குதித்து, சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய வீரர்கள்: வீடியோ…!!