ஆசிரியரைக் கொலை செய்து செல்போன் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மாணவர்கள் கைது…!!
பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஆரம்பப் பள்ளி ஆசிரியரை அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் சீனாவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஹூனான் மாகாணத்தின் லியான் குயோவ் நகரில் உள்ள ஆரம்பப்பள்ளியின் ஆசிரியரை, 11 முதல் 13 வயதிற்குட்பட்ட 3 மாணவர்கள் ஒன்று சேர்ந்து, மரக்கட்டையால் அடித்துக் கொலை செய்துவிட்டு, அவரது மொபைல் போன் மற்றும் 2 ஆயிரம் யுவான் பணத்துடன் தப்பி ஓடியுள்ளனர்.
துணியால் வாய் மூடப்பட்ட நிலையில் 52 வயதான அந்த ஆசிரியரின் பிணம் கழிவறையில் கிடந்ததால் அந்த ஆரம்பப்பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்துள்ளனர். வேறு ஒரு பள்ளியில் படிக்கும் இவர்கள் முவரும் பெற்றோர்களால் தனித்து விடப்பட்டவர்கள் ஆவர்.
கடந்த சில ஆண்டுகளாக பெற்றோர்களால் தனித்து விடப்பட்ட சிறுவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது சீனாவில் பெரும் சமூகப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating