பாடசாலை சென்ற சிறுமியைக் காணவில்லை..!!

Read Time:1 Minute, 52 Second

images (1)ஒட்டுசுட்டானில் நேற்றுமுன்தினம் பாடசாலைக்குச் சென்ற சிறுமியைக் காணவில்லை எனப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பிரதேச செயலகத்தினரின் உதவியுடன் நேற்றுத் தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டானைச் சேர்ந்த சிவநாதன் சுகிந்தினி (வயது 14) என்ற சிறுமியையே காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறுமியின் தாயார் பணிப்பெண்ணாக வெளிநாடு சென்றுள்ளார். தந்தையார் வாய் பேச மாட்டாதவர். அவர் தொழில் நிமித்தம் அநுராதபுரத்துக்குச் சென்றுள்ளார். பேத்தியாருடன் இருந்த குறித்த சிறுமி நேற்றுமுன்தினம் காலை பாடசாலைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

எனினும் பிற்பகல் ஆகியும் சிறுமி வீடு திரும்பாததனால் அவரைத் தேடிப் பாடசாலைக்குச் சென்றபோது, சிறுமி பாடசாலைக்கு வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பாதுகாவலர் அது தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் பிரதேச செயலகத்தினரது உதவியுடன் தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மூன்று வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பலி (படங்கள்)…!!
Next post பாலியல் லஞ்ச முறைப்பாட்டை உறுதி செய்ய ஆதாரங்கள் இல்லை – செஞ்சிலுவைச் சங்கம்…!!