பாலியல் லஞ்ச முறைப்பாட்டை உறுதி செய்ய ஆதாரங்கள் இல்லை – செஞ்சிலுவைச் சங்கம்…!!
Read Time:1 Minute, 13 Second
இந்திய உதவி வீட்டுத் திட்டப் பயனாளி ஒருவரிடம் தமது அதிகாரி ஒருவர் பாலியல் லஞ்சம் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டை உறுதி செய்வதற்கான ஆதாரங்கள் இல்லை என இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது விசாரணைகளில் மூலம் இந்த முடிவுக்கு வந்தாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த விசாரணை தொடர்பான ஆவணங்களை சட்டம் – ஒழுங்கு அமைச்சின் மேலதிக நடவடிக்கைக்காக கையளித்துள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் மகீஸ் ஜானி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், குற்றச்சாட்டப்பட அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கும் பொருட்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating