பந்துல பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்..!!

Read Time:1 Minute, 49 Second

Bandula-Gunawardane-556x360முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனது அரசியல் எதிர்காலத்திற்கு குந்தகம் ஏற்படும் வகையில் பந்துல குணவர்தன நேற்று நாடாளுமன்றில் கருத்து வெளியிட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்பாது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நான் ஓர் கத்தோலிக்கர், மனைவி ஓர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்.

இன மதக் குரோத உணர்வில் நாடாளுமன்றில் கருத்து வெளியிடுவது தவிர்க்கப்பட வேண்டும். எனவும் தெரிவித்திருந்தார்.

நேற்றைய தினம் நாடாளுமன்றில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரை தமிழ் பெயர் ஒன்றாக பந்துல குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக தாம் அவ்வாறு கூறவில்லை என மறுப்பு வெளியிட்ட பந்துல பின்னர் பிழையாக பெயரை குறிப்பிட்டதற்காக நாடாளுமன்றில் மன்னிப்பு கோரியிருந்தார்.

எனினும் இந்த சந்தர்ப்பத்தில் அவையில் ரவி கருணாநாயக்க இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post த்ரில்லாக பயணித்து சொர்க்கத்திற்கு செல்ல வேண்டுமா? (வீடியோ இணைப்பு)…!!
Next post தலவாக்கலையிலுள்ள சிங்கள பாடசாலையொன்றில் கல்வி கற்றுவந்த 9 மாணவர்கள் கைது..!!