சிங்கபெருமாள்கோவில் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு…!!

Read Time:1 Minute, 27 Second

8f911a5f-231f-44a8-b44b-c961e77f83e9_S_secvpfசிங்கபெருமாள்கோவில் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு நடந்துள்ளது.

சிங்கபெருமாள்கோவிலை அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சாட்சரம் (வயது 40), இவர் நேற்று முன்தினம் காலை விவசாய நிலத்தில் வேலை செய்வதற்காக சென்றார். வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2¼ சவரன் தங்க நகை மற்றும் ரூ.5 ஆயிரம் திருடப்பட்டிருந்து.

அதே கிராமத்தில் உள்ள தனசேகர் என்பவரது வீட்டின் பூட்டும் மர்மநபர்களால் உடைக்கப்பட்டிருந்தது. மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 250 கிராம் வெள்ளி பொருட்கள், பட்டுசேலை, ரூ.1000 போன்றவற்றை திருடி சென்று விட்டனர்.

இந்த 2 திருட்டு சம்பவங்கள் குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருச்சி விபத்து: டிரைவர்கள் 2 பேர் கைது…!!
Next post சொத்துக்காக கூலிப்படையை ஏவி தந்தையை கொன்ற மகன்: 4 பேர் கைது…!!