ஆம்பூர் அருகே பள்ளி மாணவியை கற்பழித்த 4 பேர் ஜெயிலில் அடைப்பு…!!
ஆம்பூர் டவுன் கெங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 40). கணவரை இழந்தவர். இவரது மகள் மோனிஷா (14). (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது). மோனிஷா, ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் மோனிஷா நேற்று முன்தினம் இரவு கன்னிகாபுரத்தில் சென்னை – பெங்களூர் ரெயில்வே பாதையை கடந்து கிறிஸ்தவ ஆலயத்துக்கு தனியாக சென்றுவிட்டு வீடு திரும்பினார்.
அப்போது ரெயில்வே பாதை அருகே 4 பேர் கொண்ட கும்பல் உட்கார்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அந்த கும்பல் மோனிஷா தனியாக நடந்து வருவதையறிந்து சுற்றிநின்று சில்மிஷத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து 4 பேரும் சேர்ந்து மாணவி மோனிஷாவை குண்டு கட்டாக தூக்கிக் கொண்டு அங்குள்ள அடர்ந்த முட்புதரின் மறைவுக்கு சென்றனர். அங்கு மோனிஷாவை வலுகட்டாயமாக 4 பேரும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்தனர்.
பின்னர் மோனிஷாவை அங்கேயே விட்டுவிட்டு 4 பேர் கும்பலும் தப்பிச் சென்றனர். இதையடுத்து மாணவி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று தாயிடம் நடந்ததை கூறினார்.
இதுகுறித்து ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் நேற்று காலை புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் மாணவி மோனிஷாவை பலாத்காரம் செய்தது கன்னிகாபுரத்தை சேர்ந்த தினகரன், ஜாஸ்குமார், கார்த்தி, சுப்பு என்பது தெரியவந்தது. இந்த 4 பேர் கும்பலையும் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
விசாரணையில் 4 பேரும் 19 வயதிற்குட்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து கற்பழிப்பு உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை வாணியம்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
Average Rating