யாழில் வெடி பொருட்கள் மீட்பு..!!

Read Time:1 Minute, 53 Second

imagesயாழில் மிதிவெடிகள் மற்றும் பராலைட் குண்டுகள் உட்பட வெடி பொருட்களை நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளன.

யாழ். நாவாந்துறை மற்றும் குப்பிளான் பகுதியில் இந்த கைக்குண்டு மற்றும் மிதிவெடிகள் கண்டு பிடிக்கப்பட்டு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

யாழ். நாவாந்துறை பகுதியில் சென்மேரீஸ் ஆலயத்திற்கு அருகாமையில், 3 பராலைட் மற்றும் 3 ஷெல்களும், குப்பிளான் பகுதியில் உள்ள வீட்டின் பின்புறத்தில் 2 மிதிவெடிகளும் மீட்கப்பட்டுள்ளன.

குப்பிளான் பகுதியில் வீட்டு வளவினை துப்பரவு செய்யும் போதே மிதிவெடிகள் இருப்பதை கண்டு வீட்டு உரிமையாளர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதேநேரம், நாவாந்துறை பகுதியில் பராலைட்கள் இருப்பதை கண்டு வீட்டு உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.

இவ்வாறு வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் இரு பொலிஸ் நிலைய பொலிஸாரும், குறித்த வெடி பொருட்களை விஷேட அதிரடி படையின் உதவியுடன் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட வெடி பொருட்களை நீதிமன்ற உத்தரவின் பின்னர் அழித்துள்ளதாகவும் சுன்னாகம் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனித உரிமை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர்..!!
Next post பாடசாலை மாணவிக்கு பாலுறுப்பை காட்டிய கடற்படை வீரர்..!!