ஆவடி தேவாலய வாசலில் துணிப்பையில் ஆண் குழந்தை: போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்…!!
Read Time:59 Second
ஆவடி என்.எம்.ரோடு அருகே சி.எஸ்.ஐ. தேவாலயம் உள்ளது. இந்த கோவில் வாசலில் நேற்று இரவு 9.30 மணியளவில் ஒரு துணிப்பை அனாதையாக கிடந்தது. இதை கண்ட தேவாலய பாதிரியார் ரத்தினசாமி துணிப்பையை பிரித்து பார்த்தார்.
பையில் பிறந்து 20 நாளான ஆண் குழந்தை துணியில் சுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு செனாய் நகரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
குழந்தையை அனாதையாக விட்டுச் சென்றது யார் என்று தெரியவில்லை. அவர்களை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating