விமல் வீரவன்ச கைது…!!
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இரண்டு கடவுச்சீட்டை தன்வசம் வைத்திருந்த காரணத்தினாலேயே அவர் கைதுசெய்யப்பட்ட தாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னர் கிடைத்த தகவல்
கால முதிர்ச்சியான கடவுச்சீட்டுடன் வெளிநாடு செல்ல முற்பட்ட குற்றச்சாட்டின் கீழ் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவிடம் ரகசிய காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஐரோப்பாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளும் நோக்கில் இன்று காலை விமல் வீரவங்ச கட்டுநாயக்க வானுர்தி தளத்திற்கு சென்றிருந்தார்.
இதன்போது, காலமுதிர்ச்சி கடவுச்சீட்டை வைத்திருந்தமை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளினால் திருப்பி அனுப்பபட்டுள்ளார்.
பின்னர், மற்றுமொரு வெளிநாட்டு கடவுச்சீட்டுடன் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கட்டுநாயக்க வானுர்தி தளத்திற்கு சென்றுள்ளார்.
இது தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் ரகசிய காவற்துறையினருக்கு அறிவித்ததையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்றில் உரையாற்றிய, சபை முதல்வர் லக்ஷ்மண் கிரியெல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, கால முதிர்ச்சி கடவுச்சீட்டுடன் வெளிநாடு செல்ல முற்பட்டதாக தெரிவித்தார்.
எனினும், பிரதமரின் தலையீட்டுடன் அவரது விஜயத்திற்கான சட்ட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபை முதல்வர் தெரிவித்துள்ளார்.
Average Rating