இருவேறு விபத்துக்களில் 4 பேர் பலி, 34 பேர் காயம்…!!

Read Time:2 Minute, 6 Second

download (3)மாத்தறையில் நேற்றிரவு மற்றும் புத்தளத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 34 பேர் காயமடைந்துமுள்ளனர்.

மாத்தறை விபத்து

மாத்தறை- தங்காலை , பாலிமுல்ல பிரதேசத்தில் முச்சக்கரவண்டி மற்றும் கெப் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாத்தறையிலிருந்து , மெத்தவத்தை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி இரவு 10 மணியளவில் விபத்தில் சிக்கியுள்ளது.

முச்சக்கர வண்டியில் பயணித்த 60 வயதான ஆண் மற்றும் 53 வயதான பெண்ணொருவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

மேற்படி விபத்தில் காயமடைந்த மற்றுமொருவர் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன் , கெப் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் விபத்து

இதேவேளை , புத்தளம் – அனுராதபுரம் வீதியில் , சிராம்பிஹடிய பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் , 33 பேர் காயமடைந்துள்ளனர்.

போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும் , லொறியொன்றும் காலை 1.30 , மோதியமையாலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு காயமடைந்தோரில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பஸ்ஸில் பயணித்தோரே உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்துமுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனது வீட்டுக்கு தானே தீ வைத்த நபர்…!!
Next post ஆரோக்கியமான முறையில் விரதம் இருப்பது எப்படி?