கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்த பரிதாபம்…!!

Read Time:3 Minute, 12 Second

france_sucide_001பிரான்ஸ் நாட்டில் கடன் சுமையை தாங்கிக்கொள்ள முடியாத தந்தை ஒருவர் 6 மாத குழந்தை உட்பட 5 பேருடன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டிற்கு வடக்குபகுதியில் உள்ள லில்லி என்ற நகரிலிருந்து சுமார் 7 கிலோ மீற்றர் தொலைவில் குடியிருப்பு பகுதி ஒன்று அமைந்துள்ளது.

இங்குள்ள வீட்டிலிருந்து பொலிசாருக்கு கடந்த புதன் கிழமை அவசர தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

தகவலை பெற்ற பொலிசார், சந்தேகத்திற்குரிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

வீட்டிற்குள் ஒரு படுக்கை அறையில், 6 மாத ஆண் குழந்தை, 4 வயது ஆண் மற்றும் 10 வயது பெண் குழந்தைகள் பரிதாபமாக இறந்துகிடந்துள்ளதை கண்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்தனர்.

குழந்தைகளுக்கு அருகில் அவரது தாயாரும்(40) சடலமாக கிடந்துள்ளார். இரண்டு அடுக்கு மாடிகள் கொண்ட அந்த வீட்டின் மற்றொரு அறையை சோதனை செய்தபோது, அங்கு தந்தை(42) தூக்கில் தொங்கியவாறு இறந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து Frederic Fevre என்ற விசாரணை அதிகாரி கூறியபோது, தந்தை இறப்பதற்கு முன்னர் ஒரு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

அக்டோபர் 16ம் திகதி எழுதப்பட்ட அந்த கடிதத்தில், ‘பல வருடங்களாக கடன் சுமை மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகி பெரும் அவதிப்பட்டு வந்துள்ளோம்.

எதிர்காலத்தில் எங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கூட கடன் சுமையால் வேதனை அடையக்கூடாது என்ற ஒரே எண்ணத்தால் இந்த சோகமான முடிவை எடுத்துள்ளதாக’ அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் குறித்து அருகில் குடியிருந்தவர்கள் கூறுகையில், ஒரு ஆண்டிற்கு முன்னர் தான் இறந்தவர்களின் குடும்பம் இங்கு குடியேறியது.

விளையாட்டு மைதானத்தில் இறந்த குழந்தைகள் உற்சாகமாக விளையாடுவதை கண்டு ரசித்துள்ளோம். ஆனால், இன்று அவர்களின் இறப்பு இந்த பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்தனர்.

5 சடலங்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிசார், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தசரா கொண்டாட்டம் முடிந்து விடு திரும்பிய சிறுமி கற்பழித்து கொலை…!!
Next post மது போதையில் மயங்கி விழுந்த தாயார்: 3 வயது மகன் காரை ஓட்டியபோது நிகழ்ந்த விபரீதம்…!!