மது போதையில் மயங்கி விழுந்த தாயார்: 3 வயது மகன் காரை ஓட்டியபோது நிகழ்ந்த விபரீதம்…!!

Read Time:2 Minute, 24 Second

smallboy_driving_001அமெரிக்க நாட்டை சேர்ந்த தாயார் ஒருவர் மது போதையில் மயங்கி விழுந்ததை தொடர்ந்து அவரது 3 வயது மகன் காரை ஓட்டி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Oklahoma நகரிலிருந்து சுமார் 130 கி,மீ தொலைவில் அடா என்ற பகுதி அமைந்துள்ளது.

இதே பகுதியில் வசித்து வந்த Taloa Foster(33) என்ற பெயருடைய தாயார் ஒருவர், கார் மூலம் பொருட்களை கடைகளுக்கு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த புதன் கிழமை அன்று, 3 வயது குழந்தை உள்ளிட்ட 2 மகன்களுடன் அளவுக்கு அதிகமாக மது அருந்துவிட்டு காரை ஓட்டிச்சென்றுள்ளார்.

நான்கு வழிச்சாலையில் கார் சென்றுக்கொண்டு இருந்தபோது, காரின் இருக்கையில் இருந்த 3 வயது சிறுவன் தனது ‘சீட் பெல்ட்டை’ நீக்கிவிட்டதை பார்த்து தாயார் காரை நிறுத்தியுள்ளார்.

சீட் பெல்ட்டை சரி செய்யும் நேரத்தில் மது போதையில் எதிர்பாராதவிதமாக காரிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.

சாலையின் மத்தியில் கார் நின்றுக்கொண்டு இருந்ததால், 3 வயது சிறுவன் சற்றும் சிந்திக்காமல் காரின் ஸ்டியரீங்கை பற்றி ஓட்டிக்கொண்டு சாலை ஓரமாக சென்றுள்ளான்.

அப்போது, எதிர்பாராத விதமாக சாலையின் தடுப்பு சுவர் மீது கார் மோதி நின்றுள்ளது.

சம்பவம் அறிந்த வந்த பொலிசார், தாயார் மற்றும் குழந்தைகள் இருவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.

3 வயது குழந்தைக்கு ஆபத்து ஏற்படும் விதத்தில் காரை ஓட்ட வைத்த தாயார் மீது பொலிசார் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்த பரிதாபம்…!!
Next post மன்னாரில் யேசுவின் இரத்தம் – சதையால் அதிசயம்..!!