பூட்டிய வீட்டில் 2 நாட்கள் தங்கிய கல்லூரி மாணவி– காதலனுக்கு நள்ளிரவில் திருமணம்…!!
அஞ்சுகிராமம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ரோஜா (வயது 21). கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார்.
இவருக்கும் சிதறாலைச் சேர்ந்த ராஜா (24) (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் காதலித்து வந்தனர். ராஜா அருமனையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். ரோஜாவின் கிராமத்தில் நடந்த ஒரு முகாமுக்கு சென்றபோது அவருடன் ராஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
ரோஜா கல்லூரிக்கு வரும் சமயம் அவரை ராஜா சந்தித்து காதலை வளர்த்து வந்தார். மேலும் 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டனர்.
நேற்றுமுன்தினம் ரோஜாவின் பெற்றோர் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவுக்கு சென்றனர். ரோஜா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். பெற்றோர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றதும் காதலனுக்கு ரோஜா செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டில் தான் மட்டும் இருப்பதாகவும், எனவே நீங்கள் வாருங்கள் என்று கூறி அழைத்தார்.
ராஜாவும் காதலி வீட்டுக்கு வந்தார். கடந்த 2 நாட்களாக காதல் ஜோடி 2 பேரும் கதவை பூட்டிக்கொண்டு வீட்டுக்குள்ளே மகிழ்ச்சியாக இருந்தனர். கோவிலுக்கு சென்ற ரோஜாவின் பெற்றோர் நேற்று இரவு 7 மணிக்கு வீடு திரும்பினர்.
பல முறை கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. வெகுநேரம் கழித்து ரோஜா கதவை திறந்தார். வீட்டுக்குள் அவரது காதலனும் நின்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஆத்திரம் அடைந்தனர். ரோஜாவை கண்டித்து விசாரித்தபோது அவர் தனது காதலன் என்றும், அவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறினார்.
இதையடுத்து ரோஜாவின் தந்தை மகள் என்றும் பாராமல் ரோஜாவையும், அவரது காதலனையும் போலீஸ்நிலையம் அழைத்துச் சென்று ஒப்படைத்தார். போலீசார் காதலர்களிடம் விசாரித்தனர். அவர்கள் 2 பேரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறினர். மேலும் காதலன் எனக்கு சற்று கால அவகாசம் வேண்டும், 2 வாரத்தில் திருமணம் செய்து கொள்கிறேன் என்றார். உடனே போலீசார் அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.
அதன்பிறகும் ஆத்திரம் தீராத ரோஜாவின் தந்தை எனது மகளை உடனே திருமணம் செய்ய வேண்டும் என்று ராஜாவிடம் வலியுறுத்தினார். இதையடுத்து ரோஜாவின் கழுத்தில் ராஜா தாலி கட்டி தனது ஊருக்கு அழைத்துச் சென்றனர்.
இரவு 7 மணிக்கு தொடங்கிய இந்த பிரச்சனை நள்ளிரவு வரை நீடித்தது.
Average Rating