சாராய விற்பனையில் பொலிசாரை ஏமாற்றிய பெண்: ரூ.25 லட்சம் மதிப்பலான எரிசாராயம் பறிமுதல்…!!

Read Time:1 Minute, 37 Second

maheswari_sarayam_002சாராயம் கடத்திய வழக்கில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.
வாணியம்பாடி நேதாஜிநகரில் வசிக்கும் மகேஸ்வரி( 45) என்பவர், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து எரிசாராயம் கடத்தி வந்து, கள்ளச்சாராயம் தயாரித்து, சென்னை, திருவள்ளூர், தாம்பரம் ஆகிய பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக விற்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 15 நாட்களாக, அவர் கள்ள சாராயம் காய்ச்சும் பம்ப் செட், மலையடிவாரம், வயல்காடு உள்ளிட்ட பகுதிகளில் சோதனையிட்ட பொலிசார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 500 கேன் எரிசாராயத்தை கைப்பற்றினர்.

பொலிசார் தேடுவதை அறிந்த மகேஸ்வரி தலைமறைவானார். ஆலங்காயம் காட்டு பகுதியில் ஒளிந்திருந்த அவர் இன்று அதிகாலை வாணியம்பாடி புறப்பட்டு செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வேப்பங்கனேரி அருகே மறைந்திருந்த வாணியம்பாடி தாலுகா பொலிசார் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

இவர் மீது 17க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புறா திருடிய சிறுவனின் மரணம்: தற்கொலை தான் எனக்கூறிய முதல்வர்…!!
Next post பிரதேச செயலாளர் விபத்தில் காயம்..!!