கார் மோதி பெண் ஒருவர் பலி

Read Time:1 Minute, 7 Second

brum25.gifமதுரவாயல்தாம்பரம் பைபாஸ் சாலையில் கார் மோதி கட்டிட வேலை செய்து வந்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மாங்காடு கரணைபுத்தூர் அருகே நோவா நகரைச் சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி தனலட்சுமி (வயது 25). இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. தனலட்சுமி கட்டிட வேலை செய்து வந்தார். வேலை முடிந்து மதுரவாயல்தாம்பரம் பைபாஸ் சாலையில் தனலட்சுமி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது தனலட்சுமி சாலையை கடக்க முயன்ற போது ஸ்கார்பியோ கார் ஒன்று அவர் மீது வேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சொத்து தகராறில் வாலிபர் எரித்துக்கொலை
Next post வீட்டுக்குள் நுழைந்தது கட்டுவிரியன் பாம்பு கடித்து 3 குழந்தைகள் பலி