சேவையிலிருந்து நீக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி கஞ்சாவுடன் கைது…!!

Read Time:1 Minute, 31 Second

693399254Arrestedகடமை ஒழுங்கீனம் காரணமாக வேலையிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் 1 கிலோகிராம் மற்றும் 80 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டிருப்பதாக அம்பாறை போதை வஸ்து ஒழிப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று சனிக்கிழமை இரவு அம்பாறையிலிருந்து சென்ற போதைவஸ்து ஒழிப்புப் பிரிவுப் பொலிஸார், அக்கரைப்பற்றுப் பொலிஸ் பிரிவில் அட்டாளைச்சேனையிலுள்ள சந்தேக நபரின் வீட்டைச் சோதனையிட்டபோது கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அட்டாளைச்சேனை 9 ஐச் சேர்ந்த முஹம்மது முஹைதீன் அப்துல் அஸீஸ் (வயது 42) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் முன்னர் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியபோது கடமை ஒழுங்கீனம் காரணமாக சேவையிலிருந்து நீக்கப்பட்டவர் எனப் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தோனேசியா: நடன கிளப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் கருகி பரிதாப பலி…!!
Next post அமெரிக்காவில் கார் மோதிய விபத்தில் இந்திய மாணவர் பலி…!!