பெண்ணின் கழுத்தை வெட்டி கொலை செய்த பிரதான சந்தேகநபர் சிக்கினார்..!!
மொரவக்க போருபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதான சந்தேக நபருடன் சேர்த்து மேலுமொருவர் மொரவக்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கொள்ளையிடுவதற்காக வீடொன்றினுள் புகுந்த வேளை, பெண்ணொருவர் தீடிரென வீட்டிற்குள் நுழைந்ததால் அந்தப் பெண்ணை கொலை செய்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பெண்ணை கொலை செய்த சந்தேக நபர் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க மலையையும் கொள்ளையடித்துள்ளதுடன், அந்த மாலையை ஹிக்கடுவை பகுதியில் உள்ள கடையொன்றில் அடகு வைத்துள்ளார்.
அந்த தங்க மாலையை நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மெரவக்கை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை மெரவக்க பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Average Rating