இளம்பெண் பாலியல் பலாத்காரம்: இரவு விருந்து முடிந்து திரும்பும் வழியில் நடந்த கொடூரம்…!!
இரவு விருந்து முடிந்து திரும்பும் வழியில் இளம்பெண் ஒருவரை வழி மறித்த மர்ம நபர் அவர் மீது பாய்ந்து தாக்கி பலாத்காரம் செய்து விட்டு தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் மேற்கு யார்க்ஷயர் பகுதியில் உள்ள Huddersfield எனும் இடத்தில் அதிகாலை 3 மணி அளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
அப்பகுதியில் நண்பர்களுடன் இரவு விருந்தை முடித்துக்கொண்டு தனியாக வரும் வழியில் மர்ம நபர் ஒருவர் பாதிக்கப்பட்ட இளம்பெண் மீது பாய்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
திருடனாக இருக்கலாம் என சுதாரித்துக்கொண்டு எழ எத்தனிக்கையில் அந்த மர்ம நபர் அவரை கடுமையாக தாக்கிவிட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பாலியல் துன்புறுத்தலால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னர் அந்த பெண் தனது நண்பர்களுடன் இருந்துள்ளதால் இது தொடர்பாக அவர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கெமராக்களை சோதனையிட இருப்பதாகவும் சாட்சிகளை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Huddersfield பகுதி மக்கள் இச்சமபவம் குறித்து அறிய வந்தால் உடனடியாக பொலிசாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்..
Average Rating