மாவீரர்கள் தொடர்ந்தும் விதைக்கப்பட கூடாதாம்! வதைத்து புதைக்கப்பட்ட மாற்று போராளிகள்பற்றி பாலகுமார் மௌனம்!

Read Time:2 Minute, 11 Second

anichildcry-2.gifதொடர்ந்தும் போராளிகளை இழக்க முடியாது என்றும், மிக விரைவில் நாம் விடுதலையை அடைய வேண்டும் என்றும் ஈரோஸ் பாலகுமார் தெரிவித்துள்ளார். ஈழப்புரட்சி அமைப்பு என்ற ஈரோஸ் இயக்கத்தை அமைத்து விடுதலைகாண புறப்பட்ட இயக்கத்தலைவர் பாலகுமார் வெறும் தாடியை வைத்து புரட்சி செய்தவர். அப்புரட்சியோடு அவரது பங்களிப்பும், அவரது இயக்கமும் முடிந்து விட்டது. முதல் முதலாக வன்னித்தலைவர் பிரபாகரனின் காலடியில் விழுந்து அவரது பாதங்களை சிரம்மேற்கொண்டு அவர்களை ஏக பிரதிநிதியென்று ஒப்புக்கொடுத்த வரலாற்றுக்குரியவர். இவரே ஏனைய கூத்தமைப்பாளர்களுக்கும் வழிகாட்டிவிட்டவர். இவ்வளவு அடிமை விசுவாசியாக இருந்தும் வன்னித்தலைவர் பால(ன்)குமாருக்கு வெற்றிடமான அரசியல்துறை செயலர் பதவியை கொடுக்கவில்லை. பாலகுமார் ஜக்கியப்பட்டாலும் புலிகளுக்கு மத்தியில் இவர் இரண்டாம்தர பிரஜையாகவே மதிக்கப்பட்டு வருகிறார். மாற்று கட்சிக்காறன் என்ற காழ்ப்புணர்ச்சி புலிகளைவிட்டு இன்னும் அகலவில்லை. மாற்று இயக்க உறுப்பினர்கள், பல தமிழ் தலைவர்கள், புத்திஜீவிகள், மாற்றுகட்சி ஆதரவாளர்கள் வன்னிபுலிகளால் வதைக்கப்பட்டு புதைக்கப்பட்ட தமிழர்களைப்பற்றி கவலைப்படாத பாலகுமார். விடுதலை வேண்டி நிற்பது சிரிப்புக்கு இடமாகியுள்ளது.
உன்னைப்பார்த்து இந்த உலகம் சிரிக்கின்றது
உன்னைப்பார்த்து உன் நிழலும் சிரிக்கின்றது.
Thanks….நெருப்பு இணையம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
Next post பாகற்கொடியில் காய்த்த தக்காளி