வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு, “அதிரடி”யின் பதில்கள் (இது எப்படி இருக்கு)

Read Time:2 Minute, 45 Second

timthumbவவுனியா வடக்கு பிரதேச செயலாளர் தொடர்பாகவும் அங்கு கடமையில் ஈடுபடும் சில உத்தியோகத்தர்கள் தொடர்பாகவும் சில ஆதாரங்கள் உள்ளதாக எமது இணையம் தெரியப்படுத்தியிருந்தது.

அத்துடன், காணி அபகரிப்பு, லஞ்சம் பெற்றமை, பணத்திற்கு காணிகளை விற்றமை தொடர்பான ஆதாரங்களே எம்மிடம் இருப்பதாகவும் தெரியப்படுத்தியிருந்தோம். இந்நிலையில் அவர்கள் இது தொடர்பில் கருத்து தெரிவிக்க விரும்பினால் எமது மின்னஞ்சலுக்கு அனுப்ப முடியும் எனவும் தெரிவித்திருந்தோம்.

ஆனால், எமது இணையத்திற்கு அவர்களால் எந்தவித பதில்களோ அல்லது மறுப்புக்களோ அனுப்பப்படவில்லை. இதனால் நாம் எம்மிடம் உள்ள வீடியோ, ஓடியோ, மற்றும் ஆவணங்களை இது தொடர்பில் வெளியிடவுள்ளோம்.

தமது பிழைகளை சரிசெய்வதை விடுத்து அதிரடி செய்தியாளர் யார்?, கரிகாலன் யார்?, அம்முக்குட்டி யார்?, அதிரடியுடன் தொடர்புகளை கொண்டிருப்பவர்கள் யார்? என்பதை தேடிப் பிடிப்பதாலோ அல்லது தெரிந்து கொள்வதாலோ எதுவும் நடந்துவிட போவதில்லை. ஏனெனில் எம்மிடம் குறித்த விடயங்கள் தொடர்பான வலுவான ஆதாரங்கள், சாட்சியங்கள் உள்ளன.

குறித்த விடயங்கள் தொடர்பாக எமது பிரத்தியேக செய்தியாளர் அம்முக்குட்டி ஊடாக தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றது. பாதிக்கப்பட்ட பலர் தாமவே முன்வந்து ஆதாரங்களை சமர்ப்பித்து வருகின்றனர். இவ் விடயம் தொடர்பான எமது விசேட செய்திகளுக்கு அம்முக்குட்டியே களத்தில் தகவல்களை பலரிடம் இருந்தும் திரட்டியுள்ளார்.

எமது இணைய வவுனியா பிரதான செய்தியாளர் கரிகாலன், புலனாய்வுச் செய்தியாளர் கானகன், செய்தியாளர் எல்லாளன், செய்தியாளர் அரிச்சந்திரன் மற்றும் வேறு ஊடகவியலாளருக்கோ எந்த தொடர்பும் இல்லை என்பதை எமது இணையம் தெரியப்படுத்துகிறது.

உண்மைகளை வெளிக்கொண்டு வரும் போது ஏற்படும் அசௌகரியங்களுக்காக வருந்துவதுடன் எமது பணி தொடரும்…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த உணவுகளை பின்பற்றுங்கள்! கொழுப்பு தானாக கரைந்துவிடும்…!!
Next post இளம்பெண் பாலியல் பலாத்காரம்: இரவு விருந்து முடிந்து திரும்பும் வழியில் நடந்த கொடூரம்…!!