புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை: துவாரகேஸ்வரனிற்கு நீதிமன்றத்தில் அனுமதி மறுப்பு..!!

Read Time:1 Minute, 47 Second

timthumb (1)ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்ற புங்குடுதீவு மாணவி வித்தியா வழக்கு தொடர்பாக ஆஜராக வரும் சட்டத்தரணியுடன், துவாரகேஸ்வரனும் தொடர்ந்து வந்து கொண்டு இருந்தார்.

இவரை இன்று இடைமறித்த பாதுகாப்பு தரப்பினர் அவர் வசம் இருந்த தொலைபேசிகளை உள்ளே எடுத்து செல்ல மறுத்து, நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கவில்லை. வழக்கு விசாரணை முடிந்த பின்னரே அனுமதி வழங்கப்பட்டது.

ஏற்கனவே நீதிமன்றத்தை அவமதித்த இவரது செயற்பாடுகள் மற்றும் கடன் தொல்லையினால் இவர் மீது ஏனையோர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாட்டின் பல பாகங்களிலும் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது.

சில ஊடகவியலாளர்களை அழைத்து வந்து தம்பட்டம் அடிக்கும் இவருக்கு நீதிமன்றத்தில் என்ன வேலை? என சமூக ஆர்வலர்களால் கேள்வி ஒன்று எழுப்பப்படுகின்றது.

இந்நீதிமன்றத்தில் “பெண்கள் உரிமை சமாசம்” என தெரிவித்து ரஜணி என்ற சந்தேகத்துக்கு இடமான பெண்ணை மன்றிற்கு அழைத்து வருகின்றார்.

இன்றுகாலை சிலரை நீதிமன்ற வளாகத்தில் சந்தித்து “சட்டத்தரணி தவராசா ஒரு நரியன்; நான் தான் நல்லவன், வல்லவன்” என தொடர்ந்து பேசியதையும் காணக்கூடியதாக இருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மது அருந்தக்கொடுத்து நண்பணின் காரை திருடிய நண்பன்..!!
Next post தாடி, மீசை இருந்தா தான் பொண்ணுகளுக்கு அதிகம் பிடிக்குமாம்..!!