பெற்றோர்களால் விபசாரத்திற்கு தள்ளப்பட்ட பெண்: விரக்தியில் தற்கொலை செய்த பரிதாபம்….!!

Read Time:1 Minute, 51 Second

ArguingCoupleSilhouetteஆந்திரா மாநிலத்தில் பெற்றோர்களாலேயே விபசாரத்திற்கு கட்டாயப்படுத்தப்பட்ட பெண் ஒருவர் விரக்தியால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த பெண் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தாய்வீட்டுக்கு வந்து தங்கி வருகிறார்.

இதை விரும்பாத அவரது பெற்றோர் மற்றும் சகோதரர்கள் அந்த பெண்ணை விபசாரத்தில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரை அடைத்து வைத்து உறவினர் ஒருவரால் பலாத்காரம் செய்ய வைத்துள்ளனர்.

இதனிடையே பலாத்காரம் செய்யப்பட்டதை புகைப்படம் எடுத்து அதனை காட்டி அவளை மிரட்டி பெற்றோர்கள் சித்ரவதை செய்துள்ளனர்.

இதனால் விரக்தி அடைந்த அந்த பெண் அப்பகுதியில் உள்ள கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இறப்பதற்கு முன் வீடியோ காட்சியை பதிவு செய்த அவர் தனது பெற்றோர் மற்றும் சகோதரர் அளித்த சித்ரவதைகளை வாக்குமூலமாகவும் பதிவு செய்துள்ளார்.

ஆந்திராவை உலுக்கிய இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடத்த அந்த மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வலிப்பு ஏற்பட்ட ஒன்றரை வயது குழந்தையை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர்: குவியும் பாராட்டு…!!
Next post ஜனவரி முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை..!!