சித்தப்பாவை காயப்படுத்தி பணத்தை கொள்ளையிட்ட யுவதி 11.11.2015 அன்று வரை விளக்கமறியலில்…!!
Read Time:1 Minute, 17 Second
தனது தாயின் சகோதரியின் கணவனை கூரிய ஆயுதத்தினால் தாக்கி அவரிடமிருந்த ஒரு இலட்சத்து 48 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட முயற்சித்த குற்றச்சாட்டில் அட்டன் வெலிஓயா மேல்பிரிவைச் சேர்ந்த யுவதி ஒருவரை அட்டன் பொலிஸார் 26.10.2015 அன்று திங்கட்கிழமை கைது செய்தனர்.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பின் சந்தேக நபரான குறித்த யுவதியை 27.10.2015 அன்று அட்டன் நீதிமன்றத்தின் பதில் நீதவான் தமயந்தி பெர்ணாண்டோவின் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தும் போது குறித்த சந்தேக நபரான யுவதியை 11.11.2015 அன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்திரவிட்டுள்ளார்.
எனினும் குறித்த சந்தேக நபரை படம் பிடிக்க சென்ற எமது ஊடகவியலாளருக்கு மேற்படி யுவதியின் உறவினர்களால் பல இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
Average Rating