மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரொருவர் பதவி ராஜினாமா..!!

Read Time:1 Minute, 24 Second

418693511hrஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தனது பதவியை ராஜினாமாச் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட பத்து சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர் மற்றும் தலைவர்கள் தற்போது நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக அண்மையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

அவ்வாறு புதிதாக நியமனம் பெற்ற உறுப்பினரான லயனல் பெர்னாண்டோ என்பவர் நேற்று தனது தனது பதவியை ராஜினாமாச் செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே தான் பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவியாக பேராசிரியர் தீபிகா உடுகம நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதன் உறுப்பினர்களாக சாலிய பீரிஸ், கஸ்ஸாலி ஹுசைன், சற்குணநாயகம் ஆகியோர் அதன் ஏனைய அங்கத்தவர்களாக கடமையாற்றுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரவு வீட்டில் உறங்கியவர் மறுநாள் இரவு சடலமாக மீட்பு..!!
Next post புத்தளம் பெண்ணின் சடலம்: வல்லுறவுக்குப் பின்னரான கொலை என உறுதி…!!