வங்காளதேசத்தில் இத்தாலியர் கொலை தொடர்பாக 4 பேர் கைது…!!

Read Time:1 Minute, 29 Second

abc8a64d-ee30-45d6-8bde-c053cbd306a9_S_secvpfவங்காளதேசத்தில் வசித்து வந்த இத்தாலிய தொண்டு நிறுவன ஊழியரான சீசர் தவல்லா (வயது 50), கடந்த மாதம் 28-ந்தேதி நடைபயிற்சியில் ஈடுபட்ட போது சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்த 5 நாட்களுக்குப்பின்னர், ஜப்பானியர் ஒருவரும் இதைப்போல சுட்டுக்கொல்லப்பட்டார். நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவங்களுக்கு, ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர். ஆனால் இதை மறுத்து வந்த வங்காளதேச அரசு, இந்த கொலை சம்பவங்களில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்க கடும் நடவடிக்கை எடுத்து வந்தது.

இந்த நிலையில் இத்தாலியர் கொலை தொடர்பாக 4 பேரை டாக்காவின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மூலம் குற்றவாளிகள் குறித்து துப்பு துலக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரிதிலும் அரிதான வெள்ளை அணில், சாம்பல் நிற அணில்களின் அழிவுக்குக் காரணமாகுமா?
Next post ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.32 லட்சம் மோசடி: வாலிபர் கைது…!!