புலிகளின் கைக்கூலிகளை புலிகளே தெரியப்படுத்துகின்றனரா?
Read Time:53 Second
புலி சார்பு இணையதளமும், மற்றும் ஊடகமொன்றும் தமிழ் தேசியத்திற்கு ஆதரவான புளொட் உறுப்பினர்கள் என்று அண்மையில் கொல்லப்பட்ட புளொட்டின் வவுனியா அமைப்பாளர் ரட்ணம் சிறீகாந்தராஜா (பவன்), மற்றும் முன்னர் கொல்லப்பட்ட தர்மலிங்கம் (வித்தி) மற்றும் திருநாவுக்கரசு (மணி) ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளன. இவ்வாறு துண்டுப் பிரசுரங்களை மேற்படி ஊடகங்களின் ஊடாக பிரசுரித்ததன் மூலம் இவர்கள் புலிகளின் கைக்கூலிகளாக செயற்பட்டுள்ளனர் என்பதை புலிகளே ஒத்துக்கொண்டுள்ளதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது.