கிளிநொச்சியில் தொடரூந்துடன் மோதி ஒருவர் பலி…!!
Read Time:1 Minute, 12 Second
கிளிநொச்சியில் தொடரூந்து ஒன்றுடன் ஈருருளி ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில், 63 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி 155 ஆம் கட்டை பகுதியில், பாதுகாப்பற்ற தொடரூந்து கடவையை கடக்க முற்பட்ட ஈருருளியே இவ்வாறு தொடரூந்தில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதேவேளை. கம்பஹா – மகாவிட்ட பிரதேசத்தில் ஒருவரை கல்லால் அடித்து கொலை செய்ததாக குற்றச்சாட்டப்பட்ட ஒருவரை இன்று வரை விளக்கமறியலில் தடுத்துவைக்குமாறு கம்பஹா நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இன்று அடையாள அணிவகுப்பிற்காக அவரை முன்னிலைப்படுத்துமாறும் நீதிவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
Average Rating