யாழ் முஸ்லீம்கள் வெள்ள நீரினால் பாதிப்பு இதுவரை யாரும் கவனிக்கவில்லை..!!
Read Time:1 Minute, 11 Second
யாழ்ப்பாணத்தில் தற்போது பெய்த மழை காரணமாக முஸ்லீம் மக்கள் இடம்பெயர தயாராகி வருகின்றனர்.
கிராம சேவகர் பிரிவு 87 பகுதியில் வசிக்கும் மேற்படி மக்களின் வீடுகளில் வெள்ள நீர் உட்புகுந்தமையினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் நுளம்புப்பெருக்கத்தினால் பலரும் கடியுண்டு நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுவதை அவதானிக்க முடிகின்றது.பாம்புகளின் நடமாட்டம் அப்பகுதி மக்களை அச்சுறுத்துவதாக நிலைமையை நேரில் சென்று அவதானித்த எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை எவ்வித உதவிகளோ அம்மக்களை சென்றடையவில்லை.எவரும் சென்று இதுவரை பார்க்கவில்லை என அப்பகுதி மக்கள் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தனர்.
Average Rating