சவுதி அரேபியாவில் கியாஸ் குழாய் வெடித்து 28 பேர் பலி: இறந்தவர்களில் ஒருவர் இந்தியர்
Read Time:44 Second
சவுதி அரேபியாவில் இருக்கும் தக்ரான் நகரில் உள்ள கச்சா எண்ணை ஆலைக்கு செல்லும் ராட்சத எண்ணைக்குழாய், திடீர் என்று தீப்பிடித்து எரிந்து, வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 28 தொழிலாளர்கள் இறந்தனர். இவர்களில் ஒருவர் இந்தியர். இந்த தகவலை துபாயில் உள்ள இந்திய தூதர் உறுதிப்படுத்தினார். இவர் ஆர்எம்கோ என்ற நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவரது பெயர் மற்றும் சொந்த ஊர் பற்றிய விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.