கால் டாக்ஸி ஓட்டுனரை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய நடிகை கைது…!!

Read Time:3 Minute, 2 Second

call_taxi_mobile_001சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுனரை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய துணை நடிகை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் கால் டாக்சி ஓட்டுனராக பணிபுரிந்து வரும் தூத்துக்குடியை சேர்ந்த ராமஜெயம் (45), கிழக்கு கடற்கரை சாலை கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில், உத்தண்டியில் வசித்து வரும் 23 வயது பெண்ணும், அவருடன் வசித்த ஆணும், என்னை வீட்டில் அடைத்து வைத்து ஆபாசமாக படம் எடுத்து பணம் பறித்து வந்தனர்.

நான் அவர்களிடமிருந்து தப்பி வந்து விட்டேன். எனது ஆபாச படங்களை அவர்கள் தவறாக பயன்படுத்தி விடுவார்களோ என்று அச்சப்படுகிறேன்.

எனவே அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பெண் சில படங்களில் துணை நடிகையாக நடித்து இருப்பது தெரியவந்துள்ளது.

கால் டாக்சியில் சென்ற போது ராமஜெயத்துடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் ராமஜெயம் அவ்வப்போது, அந்த பெண்ணை போனில் தொடர்பு கொண்டு, அழகான பெண்கள் இருந்தால் கூறுங்கள் என்று தொந்தரவு செய்துள்ளார்.

இதனால் ராமஜெயத்துக்கு பாடம் கற்பிக்க திட்டம் போட்ட அந்த பெண், தனது ஆண் நண்பர் சரண் உதவியுடன் திட்டமிட்டுள்ளார்.

மேலும், சம்பவத்தன்று அந்த பெண், ராமஜெயத்துக்கு போன் செய்துஅழகான பெண் ஒருவர் இருப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற ராமஜெயத்தை வீட்டுக்குள் அடைத்து வைத்து இருவரும் அடித்து உதைத்துள்ளனர்.

பின்னர் அவரை சட்டையை கழற்றச் சொல்லி, அந்த பெண் அருகே நிற்க வைத்து சரண் செல்போனில் படம் எடுத்துள்ளார். ராமஜெயத்திடம் இருந்த ரூ. 2 ஆயிரம் பணத்தை பறித்துள்ளனர்.

ஆனால் அதன் பின்னரும் அவருக்கு போனில் மிரட்டல்கள் வந்துள்ளன. எனவே தான் அவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

பொலிசார் அந்த இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பை அளிக்கும் சூப்பர் உணவுகள்…!!
Next post மணல் கடத்திச் செல்ல முற்பட்டவர் பொலிஸாரினால் கைது [படங்கள் இணைப்பு]