பவானி அருகே கணவர் திட்டியதால் கிணற்றில் குதித்த பெண்: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்…!!

Read Time:1 Minute, 54 Second

c4b7e76c-9e63-4c15-9995-e43a81e47bdd_S_secvpfபவானி அருகே உள்ள குருப்பநாயக்கன் பாளையத்தில் கைப்பிடி சுவர் கொண்ட ஒரு கிணற்றின் ஓரம் ஒரு பெண் வந்தார்.

அக்கம்–பக்கம் பார்வையிட்ட அந்த பெண் பிறகு திடீரென அந்த கிணற்றில் குதித்து விட்டார். இதனை தற்செயலாக பார்த்த சிலர் உடனே இது குறித்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அதிகாரி பொன்னாமலை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

கிணற்றில் விழுந்து தத்தளித்த அந்த பெண்ணை மீட்க துரித நடவடிக்கையில் ஈடுபட்டனர். உடனடியாக தீணைப்பு வீரர்கள் கயிறு கட்டி இறங்கி அதன் மூலம் அந்த பெண்ணை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

கிணற்றில் விழுந்ததில் அந்த பெண்ணுக்கு உடலில் சில இடங்களில் காயம் ஏற்பட்டு இருந்தது. அந்த பெண்ணிடம் தீயணைப்பு வீரர்கள் விசாரித்தனர். ஏன் கிணற்றில் குதித்தாய்? என்று கேட்டனர்.

அதற்கு அந்த பெண் கூறும் போது, எனது ஊர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு என்றும், என் பெயர் யமுனா. என்னை என் கணவர் திட்டியதால் தற்கொலை செய்ய கிணற்றில் குதித்தேன் என்றும் கூறினார்.

அதற்கு பிறகு ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண்ணை பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மணலியில் சாவிலும் இணை பிரியாத தம்பதி: கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு…!!
Next post சிவகிரி அருகே மலையேறி போராட்டம்: 50 பெண்கள் உள்பட 150 பேர் மீது வழக்கு..!!