கள்ளத்தொடர்பை கைவிடாத மனைவி, காதலனை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற கணவன் தலைமறைவு…!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் கள்ளத்தொடர்பை கைவிடாத மனைவி மற்றும் அவளது கள்ளக்காதலனை தடியால் அடித்துக் கொன்று, தலைமறைவாகிவிட்ட நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
இங்குள்ள ஜஞ்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள போஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர், புர்னேஷ் திவார். இவரது மனைவி குஷி(27). பெயருக்கேற்றாற்போல் அதேபகுதியைச் சேர்ந்த பவன் திவார் என்பவரோடு தனது மனைவி கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு குஷியாக குலவிவருவதாக அறிந்த புர்னேஷ், இந்த தகாத தொடர்பை கைவிடும்படி மனைவியிடம் பலமுறை வற்புறுத்தி வந்துள்ளார்.
ஆனால், சந்தர்ப்பம் வாய்க்கும் வேளைகளில் எல்லாம் பவனை சந்தித்து, உல்லாசமாக இருப்பதை அவர் நிறுத்திக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், பவனும் குஷியும் நேற்றிரவு தனிமையில் இருப்பதை கண்ட புர்னேஷ் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்றார்.
வீட்டில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து இருவரையும் கொலைவெறியுடன் தாக்கினார். இதில் மண்டை பிளந்து, படுகாயமடைந்த குஷி, சம்பவ இடத்திலேயே பலியானார். ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்செல்லப்பட்ட பவன் திவார், போகும் வழியில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக இருக்கும் புர்னேஷ் திவாரை தேடிவருகின்றனர்.
Average Rating