செல்போனில் சத்தமாக பாட்டுக் கேட்ட பழங்குடியின சிறுவன்: உயிருடன் எரித்துக் கொலை…!!

Read Time:1 Minute, 58 Second

downloadமத்திய பிரதேசத்தில் செல்போனில் சத்தமாக பாட்டுக் கேட்ட பழங்குடியின சிறுவனை உயிருடன் எரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தார் மாவட்டம் அச்சகோடா கிராமத்தைச் சேர்ந்த மாடியா (16) என்ற பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த சிறுவன், காந்த ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி, தனது செல்போனில் சத்தமாக பாட்டுக் கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, உயர் ஜாதியைச் சேர்ந்த சிலர், சிறுவனிடம் பாட்டு சத்தத்தை குறைக்குமாறு கூறியுள்ளனர்.

அதற்கு சிறுவன் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் மாடியாவை அடித்து கயிற்றில் கட்டி மரத்தில் தொங்க விட்டு, உயிருடன் தீ வைத்து எரித்துக் கொன்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும், நீதிபதிகள் கூறுகையில், இந்த விவகாரத்தை மூடி மறைக்க காவல்துறையினர் முயற்சிக்கின்றனர்.

இது போன்ற சம்பவம் மீண்டும் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துக்கு நடக்க கூடாது. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரயில் நிலையத்தில் உறவு வைத்துக்கொண்ட காதல் ஜோடி: வலைபோட்டு தேடும் பொலிசார்…!!
Next post மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்த 2 கொடூரர்கள் அதிரடி கைது..!!