மணல் கடத்திச் செல்ல முற்பட்டவர் பொலிஸாரினால் கைது [படங்கள் இணைப்பு]
அனுமதிப் பத்திரம் இல்லாமல் திருட்டுத் தனமாக கண்டர் வாகனத்தில் மணலைக் கடத்திச் செல்ல முற்பட்டவர் நெல்லியடிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மணல் கடத்திச் சென்றவரை நெல்லியடியில் இருந்து விரட்டி வந்த பொலிஸார் கோண்டாவில் சந்திப் பகுதியில் உள்ள மரத்துடன் கண்டர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதிலேயே அவரைக் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது:-
இன்று காலை துண்ணாலைப் பகுதியில் இருந்து மணலை திருட்டுத் தனமாக கண்டர் வாகனத்தில் கடத்தி வந்த போது வீதி சோதனையில் நின்ற பொலிஸார் குறித்த கண்டர் வாகத்தினை மறித்துள்ளனர்.
இருப்பினும் கண்டர் வாகனம் அங்கு நிறுத்தப்படாமல் தப்பிச் சென்றுள்ளது. தப்பிச் சென்ற வாகனத்தினை பொலிஸார் துரத்தியுள்ளனர்.
இதனால் மிக வேமாக வந்த கண்டர் கோண்டாவில் பகுதியில் உள்ள அரச மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதன் போது அங்கு நின்ற ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிலும் சேதமாக்கப்பட்டுள்ளது.
கண்டர் வாகனத்தின் சாரதியினை மடக்கிப் பிடித்த பொது மக்கள் அவரை அங்கேயே வைத்து நையப்புடைத்துள்ளனர். சிறிது நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் பொது மக்களிடம் இருந்து கண்டர் வாகனத்தின் சாரதியினை மீட்டுச் சென்றுள்ளனர்.
Average Rating