உக்ரேன் நாட்டில் சுரங்கம் இடிந்து விழுந்து 100 தொழிலாளர்கள் பலி
Read Time:1 Minute, 21 Second
முன்னாள் சோவியத் ïனியனில் ஒரு பகுதியாக இருந்து பிரிந்து சென்ற நாடுகளில் ஒன்று உக்ரேன். இந்த நாட்டின் டோனட்சிக் பகுதியில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் 456 தொழி லாளர்கள் 3300 அடி ஆழத்தில் வேலை செய் கொண்டிருந்தனர். அப்போது சுரங்கத்துக்குள் மீத்தேன் வாயு கசிந்தது. சிறிது நேரத்தில் கியாஸ் வெடித்தது. இதில் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. வேலை செய்து கொண்டிருந்த தொழி லாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்டனர். இதில் மண்ணில் புதைந்தும் முச்சுத்தினறியும் 100 தொழிலாளர்கள் பலியாகி விட்டனர். இது வரை 68 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. மீதி உள்ள வர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 50 க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.