தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தீயணைப்பு வீரர்: வைரலாக பரவும் மரண வாக்குமூலம்…!!
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தீயணைப்பு வீரர் மணிகண்டன் தனது மரணத்திற்கு யார் காரணம் என்பது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வந்த மணிகண்டன் என்பவர் கடந்த 9 ஆம் திகதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்போது, சக தீயணைப்பு வீரர்கள் இவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய தீயணைப்பு அதிகாரி விஜயகுமார் கடந்த 16 ஆம் திகதி மணிகண்டன் உட்பட 9 பேரை பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டார்.
இதில், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட மணிகண்டன் மன உளைச்சலுக்கு ஆளானார், இதனால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மணிகண்டன், இறப்பதற்கு முன்னால் தனது மரணத்திற்கு யார் காரணம் என்பது குறித்த வாக்குமூலத்தை வாட்ஸ்அப்பில் பதிவு செய்துள்ளார்.
தற்போது இந்த வாட்ஸ்அப் வீடியோ வைரலாக பரவி வருகிறது. மணிகண்டனை இடமாறுதல் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அவரது இறப்பிற்கு காரணம் என சக வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
Average Rating