தெற்கு சூடானில் மனித ரத்தத்தை குடிக்க சொல்லி பொதுமக்களை துன்புறுத்திய தீவிரவாதிகள்…!!

Read Time:1 Minute, 44 Second

ca5242d4-11cc-433e-80cd-640beba0266d_S_secvpfஆப்பிரிக்காவில் உள்ள தெற்கு சூடான் நாட்டில் 2013–ம் ஆண்டில் இருந்து உள்நாட்டு சண்டை நடந்து வருகிறது. ராணுவத்தினரும், தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். பல பகுதிகள் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இரு தரப்புக்கும் நடந்த சண்டையில் பல்லாயிரக்கணக்கானோர் உயிர் இழந்துள்ளனர். 20 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். அங்கு நடக்கும் சம்பவம் தொடர்பாக ஆப்பிரிக்க யூனியன் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. அதன் அறிக்கை இப்போது தாக்கல் செய்யப்பட்டது. அதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தீவிரவாதிகளுக்கும், ராணுவ படையினரும் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இரு தரப்பினருமே பெண்களை கடத்தி சென்று கற்பழித்து உள்ளனர்.

தீவிரவாதிகள் தங்கள் எதிரிகளை கொன்று அவர்களுடைய ரத்தத்தை பொதுமக்களை வற்புறுத்தி குடிக்க வைத்துள்ளனர். மேலும் கொல்லப்பட்டவர்களை தீயில் சுட்டு அவர்களுடைய இறைச்சியை மக்களை கட்டாயமாக சாப்பிட செய்துள்ளனர். இது போன்று மிக மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தீயணைப்பு வீரர்: வைரலாக பரவும் மரண வாக்குமூலம்…!!
Next post கருவில் அழிந்துபோன இரட்டை சகோதரனுக்கு குழந்தை பிறந்த வினோதம்…!!